இந்தியா கேட் பகுதியில் சிலை: பிரதமர் மோடி அறிவிப்புக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகள் வரவேற்பு!

Update: 2022-01-22 08:20 GMT

டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மகள் அனிதா போஸ் நேதாஜியின் பேரன்கள் சுகதா போஸ் உள்ளிட்டோர்கள் வரவேற்று பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், ஜெர்மனியில் வசித்து வரும் நேதாஜியின் மகள் அனிதா போஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள் பேட்டியில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் அறிவிப்பு எங்கள் குடும்பத்துக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்துள்ளது. 


இந்தியா மிகவும் அருமையான இடம். இவ்வளவு முக்கியமான இடத்தில் சிலை வைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், பிரதமரின் அறிவிப்பு திடீரென்று வந்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இருந்தபோதிலும் இந்த அறிவிப்பு தாமதமாக இருந்தாலும் இது ஒரு நல்ல நடவடிக்கையாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Maalaimalar

Image Courtesy: News 18

Tags:    

Similar News