டெல்லி: 10 மாதங்களுக்கு பின் 9,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.!

டெல்லி: 10 மாதங்களுக்கு பின் 9,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.!

Update: 2021-02-05 09:40 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் பூட்டப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. அதே போன்று டெல்லியில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதன் பின்னர் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் கடந்த ஜனவரி 18ம் தேதி முதல் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், 9- மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டாக வீடுகளிலேயே முடங்கியிருந்த மாணவர்கள் தற்போதுதான் வெளியில் வர ஆரம்பித்துள்ளனர்.

Similar News