ஆர்.டி.ஓ. அலுவலகம் போகாமல் லைசென்ஸ் வாங்கலாம்.. மத்திய அரசு கொண்டுவந்த புதிய நடைமுறை.!

பயிற்சி மையங்களுக்கான விதிமுறைகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வருகிற 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

Update: 2021-06-12 01:56 GMT

நல்ல திறன் வாய்ந்த ஓட்டுநர்களுக்கான பற்றாக்குறை மற்றும் சாலை விதிகள் பற்றிய புரிதல் இல்லாமல் ஏராளமான விபத்துகள் நடைபெற்று வருவது இந்திய சாலை போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் மிகவும் திறமையான ஓட்டுநர்களை உருவாக்க அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை உருவாக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் ஓட்டுநர்கள் ஓட்டுனர் உரிமம் எடுப்பதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் நேரில் சென்று வாகனங்களை இயக்கி காண்பிக்க தேவையில்லை.




 


இந்நிலையில், பயிற்சி மையங்களுக்கான விதிமுறைகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வருகிற 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

அதன்படி இந்த பயிற்சி மையங்களில் உயர்தர பயிற்சியை உறுதி செய்வதற்காக மாதிரிகள், பிரத்யேக ஓட்டுனர் பயிற்சி சாலைகள் இருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி மாற்று மற்றும் மேம்பட்ட பாடப்பிரிவுகள் இந்த மையங்களில் கற்றுக்கொடுக்கப்படும்.




 


இதில் வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்கள், டிரைவர்கள், ஓட்டுநர் உரிமத்துக்காக ஆர்.டி.ஓ. அலுவலகம் சென்று வாகனங்களை இயக்கி காண்பிக்க தேவையில்லை. இதனால் ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்கான வழிமுறைகள் எளிதாகும்.

Tags:    

Similar News