இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களில் ரயில் விபத்துக்களால் உயிரிழப்பு இல்லை!

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களில் ரயில் விபத்துக்களால் உயிரிழப்பு இல்லை!

Update: 2021-02-12 17:19 GMT
கடந்த 22 மாதங்களாக ஒரு பயணிகூட ரயில் விபத்துகளில் உயிரிழக்கவில்லை என மாநிலங்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ் கோயல் பேசியதாவது, இந்தியாவில் ஏற்பட்ட ரயில் விபத்துகளில் கடந்த 2 ஆண்டுகளில் ஒரு பயணி கூட உயிரிழக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி நடந்த விபத்தில் பயணி உயிரிழந்ததுதான், கடைசியாக ரயில்வே விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு. அதன்பின்னர் கிட்டத்தட்ட 22 மாதங்களாக, ஒரு பயணிகூட ரயில் விபத்துகளில் உயிரிழக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய மறுசீரமைக்கப்பட்ட ரயில்வே வாரியத்தில், இந்திய ரயில்வேயில் முதன்முறையாக பாதுகாப்புக்கான இயக்குநர் ஜெனரலை நியமித்துள்ளோம் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.  

இதைப்போல ரயில்வே பாலம் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும் அரசு கவனம் செலுத்தியுள்ளது. மழைக்காலத்திற்கு முன்பு ஒருமுறையும், பின்பு ஒருமுறையும் பாலங்களில் ஆய்வு மேற்கொள்கிறோம். 
அரசு தரப்பில் ரயில்வே துறை நல்ல முறையில்  இயங்குவதற்கு பல்வேறு உதவிகளை செய்து கொண்டுதான் வருகிறது.

Similar News