எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய நபர் சுட்டுக்கொலை!

எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய நபர் சுட்டுக்கொலை!

Update: 2021-01-15 19:08 GMT

வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி ஊடுருவிய நபரைப் பஞ்சாபில் குர்தாஸ்புரில் உள்ள எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாகத் துணை இராணுவ படை தெரிவித்துள்ளது. 

"வியாழக்கிழமை அன்று 8.45 மணியளவில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லையில் ஊடுருவி இருப்பதாக சந்தேகத்தித்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் முயற்சி மேற்கொண்டனர். அச்சுறுத்தலுக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு ஊடுருவிய நபரைச் சுட்டுக்கொண்டனர்," என்று BSF டிவிட்டரில் தெரிவித்திருந்தார். 

அவரிடம் இருந்து ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் ஊடுருவிய நபர் குறித்து அடையாளம் கண்டறிய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 16 இல் இரண்டு ஊடுருவிய இராணுவ வீரர்களைச் சுட்டுக்கொன்றது. மேலும் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்களை மற்றும் ஹெராயின் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மூன்று முறை இந்தியாவிற்குள் ஒரே இரவில் போதைப் பொருட்களை இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாஸ்கிதான் முயற்சி முறியடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் BSF அவர்களிடம் இருந்து AK-56 துப்பாக்கிகள், இரண்டு தோட்டாக்கள், ஒரு மேக்னம் துப்பாக்கி, ஒரு ஒலிம்பியா துப்பாக்கி மற்றும் 5 Kg ஹெராயின் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியுள்ளனர். 

Similar News