நாட்டின் ஒற்றுமையை யாராலும் சீர்குலைக்க முடியாது: குருத்வாரா விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

இந்திய நாட்டின் ஒற்றுமையை யாராலும் சீர்குலைக்க முடியாது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2021-12-25 12:57 GMT

இந்திய நாட்டின் ஒற்றுமையை யாராலும் சீர்குலைக்க முடியாது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

குஜராத் மாநிலம், கட்ச் பகுதியில் குருத்வாரா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இணைந்தார். அப்போது அவர் பேசும்போது: நமது முன்னோர்கள் அனைவரும் நமக்கு ஒற்றுமையை விதைத்து விட்டு சென்றுள்ளனர். எனவே நாம் அனைவரும் இந்தியர்களாக ஒற்றுமையாக செயல்பட வேண்டியது மிகவும் அவசியமானது.

மேலும், நமது நாட்டுடைய ஒற்றுமையை யாராலும் சீர்குலைக்க முடியாது. நாட்டு மக்களின் ஒற்றுமையை இந்த நன்னாளில் அனைவரும் குருநானக் ஆசியுடன் உறுதியேற்போம். இதனால் நமது பாரதம் புதிய உச்சத்தை எட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: ANI

Tags:    

Similar News