தடுப்பூசி செலுத்தும்முன் செவிலியர்களை சிரிக்க வைத்த பிரதமர் மோடி.!

பிரதமர் மோடி இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்தும்போது இரண்டு செவிலியர்கள் உடனிருந்தனர்.

Update: 2021-03-01 13:32 GMT

பிரதமர் மோடி இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்தும்போது இரண்டு செவிலியர்கள் உடனிருந்தனர்.

அதில் ஒருவர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த செவிலியர் நிவேதாவும், கேரளாவைச் சேர்ந்த மற்றொரு செவிலியரும் தடுப்பூசி செலுத்தினர்.

தடுப்பூசி செலுத்தும்போது அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரிய துண்டை தோளில் அணிந்திருந்தார். அந்த துண்டு அஸ்ஸாம் பெண்கள் அவருக்கு பரிசாக வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


 



புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் வரஉள்ளது. அதில் மூன்று மாநிலங்களை பிரதிபலிக்கும் வகையில் மோடி செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரதமர் மோடி தடுப்பூசி செலுத்தும் முன்னர் செவிலியர்களை சிரிக்க வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News