தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.!

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.!

Update: 2021-01-31 08:21 GMT

நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. அதே போன்று தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள் என்று 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

மேலும், வெளியூர் சென்று கொண்டிருக்கும் குழந்தைகளின் வசதிக்காக, பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தல்.

தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் தொடங்கும் இந்த முகாம், மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த முகாமில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

Similar News