கொரோனா தடுப்பூசியால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு.!

கொரோனா தடுப்பூசியால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு.!

Update: 2021-01-14 10:41 GMT

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் காரணமாக, ஜன.,17ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ‘போலியோ’ சொட்டு மருந்து வழங்கும் முகாம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது பற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருந்ததாவது: தேசிய நோய் தடுப்பு தினமான ஜனவரி 17ம் தேதி அன்று சொட்டு மருந்து வழங்கும் முகாம், துவங்கப்படும்.

நாடு முழுதும் 3 நாட்களுக்கு இந்த முகாம் நடைபெறும். தடுப்பு மருந்துகள் பெறாத குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும் என கூறியிருந்தார்.

இதற்கிடையில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணகள் நாளை முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை கருத்தில்கொண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த முகாம் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலர்களுக்கு சுற்றிரிக்கை அனுப்பியுள்ளது.

Similar News