மற்ற நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவதில் இந்தியா ஒரு உண்மையான கூட்டாளி! ஆப்கானிஸ்தான் அதிபர் புகழாரம்!
மற்ற நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவதில் இந்தியா ஒரு உண்மையான கூட்டாளி! ஆப்கானிஸ்தான் அதிபர் புகழாரம்!
அஷ்ரப் கனியுடன் உரையாடும் போது, பிரதமர் மோடி ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சி மற்றும் இந்தியாவுடனான ஆப்கானிஸ்தானின் நட்பை எந்த அந்நிய சக்தியாலும் தடுக்க முடியாது என்று உறுதியளித்ததாகவும், இந்தியா ஆப்கானிஸ்தானின் அபிவிருத்திச் செயற்பாட்டில் தொடர்ந்து இணைந்து இருப்பதாகவும் உறுதியளித்தார்.
மோதல்கள் நிறைந்த ஆப்கானிஸ்தான் நாட்டில் பல காலமாக நடைபெற்ற வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, "ஆப்கானிஸ்தானில் வன்முறையை குறைப்பதில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஒரு விரிவான போர்நிறுத்தத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்று கூறினார். “ஆப்கானிஸ்தானுக்குள் ஒற்றுமை முக்கியமானது. ஒன்றுபட்ட ஆப்கானிஸ்தான் எந்தவொரு சவாலையும் சமாளிக்கும் திறன் கொண்டது என்று நான் நம்புகிறேன்.” என்று பிரதமர் மோடி கூறினார்.
Signing MoU on Shahtoot Dam with President @ashrafghani. https://t.co/Ltfbn8jk0J
— Narendra Modi (@narendramodi) February 9, 2021
இதற்கிடையில், உள்கட்டமைப்பு திட்டங்களை கட்டியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த அஷ்ரப் கனி, “ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவின் வளர்ச்சி உதவி நமது நிலப்பரப்பில் சின்னமாக குறிக்கப்பட்டுள்ளது.” என்றார். மேலும் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியில் இந்தியா ஒரு உண்மையான கூட்டாளி என்றும் அவர் குறிப்பிட்டார்.