அப்பாவி OBCக்கள் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டம்.! பின்னணியில் கிறிஸ்தவ எவாஞ்சலிஸ்ட்கள்?
அப்பாவி OBCக்கள் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டம்.! பின்னணியில் கிறிஸ்தவ எவாஞ்சலிஸ்ட்கள்?
கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சாரம் இந்தியாவின் மீதும் இந்துக் கலாச்சாரத்தின் மீதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சாரம் குறிப்பாக தெலுங்கு பேசும் மாநிலங்களான ஆந்திரா பிரதேஷ் மற்றும் தெலுங்கானாவில் பிரதானமாக பிரச்சினைகளை அதிகரித்து வருகின்றன.
தெலுங்கானாவின் சங்கம் ஸ்ரீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஹிந்து தலித்களுக்கும் அதிலிருந்து மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில், அப்பாவி OBCகள் 18 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் இந்த கிராமத்தைச் சேர்ந்த தலித்துகள், அந்த கிராமத்தை சேர்ந்த கிராம முன்னேற்ற கமிட்டியினர் (VDC) SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அதற்கு காரணமாக தாங்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதாக புகார் அளித்தனர். அப்பொழுது வந்த செய்திகளின் படி, தசரா இந்து பண்டிகை கொண்டாட்டத்தில் இந்த சர்ச்சை ஏற்பட்டதாகத் தெரிய வருகிறது.
கடந்த வருடம் அக்டோபர் 25-ஆம் தேதி, சில தலித் இளைஞர்கள் அம்பேத்கர் சிலையின் அருகில் தசரா பண்டிகை நடப்பதை எதிர்த்து பிரச்சினையைக் கிளப்பினர். அப்பொழுது எதிர்ப்புகளை தெரிவித்ததற்காக, கிராம குழு (VDC) தங்களை ஒதுக்கி வைத்து விட்டதாக குற்றம் சுமத்துகிறார்கள்.
தலித் குடும்பங்கள் மேலும் கூறுகையில், VDC ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாகவும், கடந்த சில மாதங்களாக காலனியில் அத்தியாவசிய சேவைகளைப் பெறக் கூட தங்களை அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். எனவே, VDC கிராம குழுவின் உறுப்பினர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.