பிரதமர் மோடியை கவர்ந்த பாரதியார் பாடல்கள் - அருணாச்சல பிரதேச சிறுமிகளை தமிழில் பாராட்டிய பிரதமர்

'ஒரே இந்தியா, உன்னத இந்தியா' என அருணாச்சல பிரதேசத்தில் பாரதியார் பாடலை பாடிய சிறுமிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-21 11:19 GMT

'ஒரே இந்தியா, உன்னத இந்தியா' என அருணாச்சல பிரதேசத்தில் பாரதியார் பாடலை பாடிய சிறுமிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாரதியாரின் பாருக்குள்ளே நல்ல நாடு எனும் பாடலை பாடிய அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த சிறுமிகளின் வீடியோ இணையங்களில் வைரலானது .இந்நிலையில் இந்த சிறுமிகளை பிரதமர் மோடி தமிழில் பாராட்டியது தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாருக்குள்ளே 'நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என பாடலை பாடியுள்ளனர். இதற்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் இதை கண்ட பொழுது நான் பெருமகிழ்ச்சியும், உவகையும் அடைந்தேன். ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 'இளைஞர் சக்தி' நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்து மோடி தமிழ் நாட்டை சேர்ந்த தலைவர்களையும், தமிழ்நாட்டின் மீதும் மிகுந்த அக்கறை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Source - News 18 Tamil Nadu

Similar News