மே 26ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்!

Update: 2022-05-15 06:35 GMT

மே 26ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, தேசி நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று நாட்டுக்காக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டுகிறார். அதன்படி ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னைக்கு பிரதமர் மோடி வருகை தருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்பொழுது இருந்தே தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் கலந்து கொள்வதற்காக செல்லும் சாலைகள் போலீசார் வளையத்திற்குள் கொண்டுவரப்படுகிறது. பிரதமர் மோடி தமிழகம் வருகை தருவது பா.ஜ.க.வினர் மத்தியில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியிடம் இலங்கை பிரச்சினை குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Malaimalar

Image Courtesy: The Financial Express

Tags:    

Similar News