பரபரப்பு! கோவிலில் பூசாரி மற்றும் சிறுமி மீது துப்பாக்கிச் சூடு!

பரபரப்பு! கோவிலில் பூசாரி மற்றும் சிறுமி மீது துப்பாக்கிச் சூடு!

Update: 2021-02-01 18:15 GMT

நாட்டில் தொடர்ந்து இந்து கோவில்கள் மற்றும் பூசாரிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. நாட்டில் மட்டுமல்லாது அண்டை இஸ்லாமிய நாடுகளிலும் சிறுபான்மை மீதான தாக்குதல் நடந்து கொண்டே இருக்கின்றது. ஜனவரி 31 இல் பஞ்சாபில் பில்லாரி பகுதியில் உள்ள ஒரு இந்து கோவிலில் அடையாளம் தெரியாத நபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அவர்கள் பூசாரி மேல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தாக்கப்பட்ட பூசாரியைக் காப்பாற்றவந்த 16 வயது சிறுமியையும் சுட்டுக் கொன்றுள்ளனர். 

மேலும் அறிக்கையின், தாக்கப்பட்ட சிறுமி சிம்ரன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட இருவரும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவமானது அதிகாலையில் பார் சிங் புரா கிராமத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் போது கோவிலில் பக்தர்களும் இருந்துள்ளனர். இந்த தாக்குதலால் பக்தர்களிடையே நெரிசல் ஏற்பட்டது. தாக்குதல் காரர்கள் பூசாரி அமர்த்திருந்த இடத்திற்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அந்த பூசாரியை காப்பற்ற வந்த சிறுமியையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த தாக்குதலுக்கு முழுமையான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு SP சுஹைல் காசிற் மீர் மற்றும் SHO சஞ்சீவ் கபூர் அந்த இடத்தை அடைந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பே சாண்ட் ஞான் முனி கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் அமைக்கப்பட்டது தொடர்பாக சில தகராறு இருந்து வந்ததாக்கத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. "இரண்டு குற்றவாளிகள் மீது இந்தியத் தண்டனை சட்டம் 307 மற்றும் 34 கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது," என்று SHO தெரிவித்தார். 

Similar News