மடாதிபதிகளுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆலோசனை - பின்னணி என்ன?

Update: 2022-07-15 08:02 GMT

ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மடங்களின் மடாதிபதிகளுடன் சித்ரதுர்காவில் நேற்று (ஜூலை 14) முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகா மாநிலம், சித்ரதுர்காவுக்கு வருகை புரிந்தார். அங்குள்ள தலித் சமுதாய மடமான மாதாரா சென்னய்யா குருபீடத்தில் இரவு தங்கினார்.

மேலும், அங்குள்ள தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மடங்களின் மடாதிபதிகளுடன் நேற்று காலையில் சிற்றுண்டி சாப்பிட்டார். அதன் பின்னர் அவர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பின்போது 20க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் உடனிருந்தனர். கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் மடாதிபதிகளுடன் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் சந்திப்பு என்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Source: Dinamalar

Image Courtesy: The Hindu

Tags:    

Similar News