விண்வெளி விழிப்புணர்வு: 1000 மாணவர்கள் வடிவமைத்த 100 சிறிய செயற்கைகோள்கள்.!

விண்வெளி விழிப்புணர்வு: 1000 மாணவர்கள் வடிவமைத்த 100 சிறிய செயற்கைகோள்கள்.!

Update: 2021-02-04 18:01 GMT

ராமேஸ்வரத்தில் அறிவியல் மற்றும் விண்வெளி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட 100 சிறிய செயற்கைகோள்கள் பிப்ரவரி 7ம் தேதி பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் இந்த செயற்கைக்கோள்களை 7 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவர்கள் 6 நாள் இணையவழி பயிற்சியை வைத்து உருவாக்கியுள்ளனர். இவை அனைத்தும் 40 கிராம் முதல் 50 கிராம் வரை எடை கொண்டவை ஆகும். இந்த செயற்கைக்கோள்கள், ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பெரிய பலூனில் வைத்து வானில் பறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் மூலமாக வானிலை, விவசாயம், வெப்பமயமாதல், உள்ளிட்ட தகவல்களை நேரடியாக மாணவர்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News