அறப்பணிகள் மதமாற்றத்தை நோக்கமாக கொண்டிருக்கக் கூடாது: சுப்ரீம் கோர்ட் கருத்து!

அறப்பணிகள் மதமாற்றத்தை நோக்கமாக கொண்டிருக்கக் கூடாது என்று பொதுநல வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்து இருக்கிறது.

Update: 2022-12-07 09:15 GMT

அறப்பணிகள் மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது என்றும், பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வதும் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் மதமாற்றம் தொடர்பான மாநிலங்களிடம் இருந்து விரிவான தகவல்களை பெற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத மாற்றத்திற்கு எதிரான பா.ஜ.க தலைவர் அஸ்வினி குமார் பின்பு கோட்டில் பொதுநல வழக்கு தொகுத்துள்ளார்.


பணம் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை அளித்து செய்யப்படும் மதம் மாற்றும் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும். மேலும் மத மற்றும் தொடர்பாக ஏற்படும் தீங்குகள் அதன் தொடர் விளைவுகளை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. மோசடியான மதமாற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் அறிக்கை தயார் செய்யும் மற்றும் மசோதாவை உருவாக்கவும் மத்திய சட்ட ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை செய்த நீதிபதிகள் அறப்பணிகள் என்பது மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது பண மற்றும் பரிசுப் பொருட்களை அளித்து செய்யும் மதமாற்றம் மிகவும் ஆபத்தானது.


அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே மதமாற்று ஒழிப்புச் சட்டங்கள் பற்றி மாநில அரசுகளிடமிருந்து விரிவான தகவல்களை செய்கிறது. அவற்றை பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு தற்போது உத்தரவிடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இந்த வழக்கில் மத்திய அரசு ஒரு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில் கட்டாயம் மதம் மாற்றத்திற்கு எதிராக மத்திய பிரதேசம் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ள சட்டத்தை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததை குறிப்பிட்டு இருந்தது. கர்நாடகா, அரியானா ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என மத்திய அரசு தனது பதில் முடிவில் தெரிவித்து இருந்தது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News