விவசாயிகளுடன் பேச்சு வாரத்தைக்கு தயார்.. மாநிலங்களவையில் பிரதமர் பேச்சு.!

விவசாயிகளுடன் பேச்சு வாரத்தைக்கு தயார்.. மாநிலங்களவையில் பிரதமர் பேச்சு.!

Update: 2021-02-08 15:00 GMT

மத்திய பட்ஜெட் கூட்டதொடரையொட்டி மாநிலங்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: நமது நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு விரும்புகிறது. தற்போது நாட்டில் எதனால் விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது என்று விரிவான விவாதம் நடத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மேலும், விவசாயிகளின் பிரச்சனை பற்றி பேசுபவர்கள் சிறு விவசாயிகளை மறந்து விட்டனர். மேலும், வேளாண் சட்டங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் அது விரைவில் சரிசெய்யப்படும். அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News