பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் தீட்டிய 6 பேர் கைது! 2 பேர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் !

நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் தீட்டிய 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்ற அதிர்ச்சியான தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-09-15 03:19 GMT

நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் தீட்டிய 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்ற அதிர்ச்சியான தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில், தசரா, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரும் நிலையில், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு சிலர் திட்டமிட்டிருப்பதாக டெல்லி போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது.

இந்த தகவலை தொடர்ந்து ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் டெல்லி போலீசார் அதிரடியான சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது டெல்லியை சேர்ந்த 2 பேரும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 2 வெடிகுண்டுகள், ஒரு கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து மற்றும் இத்தாலியில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதியான தாவுத் இப்ராஹீமின் சகோதரரான் அனீஸ் இப்ராஹீம் மூளையாக செயல்பட்டுள்ளதை டெல்லி போலீசார் உறுதி செய்துள்ளனர். தற்போது நாட்டில் நடைபெறவிருந்த மிகப்பெரிய பயங்கரவாத சம்பவத்தை டெல்லி போலீசார் முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News