காஷ்மீருக்குள் நுழைவதற்கு 70 தீவிரவாதிகள் தயாராக உள்ளனர் ! - இந்திய ராணுவ அதிகாரி தகவல் !

நடப்பாண்டில் போர் நிறுத்த விதிமீறல் எதுவும் நடக்கவில்லை என்று கூறிய லெப்டினன்ட் ஜெனரல் டிபி பாண்டே, அதே நேரத்தில் யார் தாக்குதல் நடத்தினாலும் அதற்கான எதிர்வினை தாக்குதல் கொடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

Update: 2021-09-21 04:24 GMT

காஷ்மீருக்குள் நுழைவதற்கு 60 முதல் 70 தீவிரவாதிகள் வரை பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் காத்திருப்பதாக ராணுவ உயர் அதிகாரி கூறியுள்ளார்.

நடப்பாண்டில் போர் நிறுத்த விதிமீறல் எதுவும் நடக்கவில்லை என்று கூறிய லெப்டினன்ட் ஜெனரல் டிபி பாண்டே, அதே நேரத்தில் யார் தாக்குதல் நடத்தினாலும் அதற்கான எதிர்வினை தாக்குதல் கொடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

எல்லைக்கு அப்பால் ஊடுருவல் எதுவும் நடைபெறவில்லை என்று குறிப்பிட்ட அவர், பந்திப்போராவில் நடந்த ஊடுருவில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டதாகவும் கூறினார்.

Source, Image Courtesy: Polimer


Tags:    

Similar News