பயங்கரவாதிகளை எளிதாக கண்காணிக்கலாம்.. இந்திய ராணுவ வீரரின் அசத்தலான கண்டுபிடிப்பு.!
பயங்கரவாதிகளை எளிதாக கண்காணிக்கலாம்.. இந்திய ராணுவ வீரரின் அசத்தலான கண்டுபிடிப்பு.!
ஒரு இந்திய இராணுவ அதிகாரி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு மைக்ரோ காப்டரை உருவாக்கியுள்ளார். இது பயங்கரவாதிகள் மறைந்துள்ள ஒரு கட்டிடம் அல்லது அறைக்குள் கண்காணிப்பை மேற்கொள்ள இராணுவத்தால் பயன்படுத்தப்படலாம்.
மைக்ரோகாப்டரை லெப்டினன்ட் கேணல் ஜி.ஒய்.கே.ரெட்டி உருவாக்கியுள்ளார்.
மைக்ரோ காப்டரின் சோதனைகள் ஜம்மு-காஷ்மீரில் ஒரு பாரா சிறப்புப் படை பட்டாலியனால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இந்த மைக்ரோ ட்ரோனில் மேலும் மேம்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கிடையே எல்லைகளில் கண்காணிப்புக்காக ஸ்விட்ச் ட்ரோனை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்திய ராணுவம் கையெழுத்திட்டுள்ளது.
செங்குத்து டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் ட்ரோன் அதிகபட்சமாக 4,500 மீட்டர் உயரத்தில் இரண்டு மணி நேரம் பறக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று ஐடியா ஃபோர்ஜ் என்ற நிறுவனத்தின் மோஹித் பன்சால் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு DRDO உடன் இணைந்து நேத்ரா ட்ரோனை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இந்திய இராணுவத்தின் உள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் நிகழ்வில் இவை காட்சிக்கு வைக்கப்பட்டன.