பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் ஜனாதிபதியை சந்தித்தார் நிதியமைச்சர்.!

பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் ஜனாதிபதியை சந்தித்தார் நிதியமைச்சர்.!

Update: 2021-02-01 10:27 GMT

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனையொட்டி நாடாளுன்றத்திற்கு முன்னதாகவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்திருந்தார். அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன் பின்னர் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். நடப்பு 2021 - 22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நில நிமிடங்களிலேயே இணையத்தில் வெளியிடப்படுகிறது. சாமானிய மக்களும் பட்ஜெட்டின் முழு விவரத்தை தெரிந்து கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
 

Similar News