தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளி ரஷீத் டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச காவல்துறையால் சுட்டுக் கொலை.!

தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளி ரஷீத் டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச காவல்துறையால் சுட்டுக் கொலை.!

Update: 2021-02-04 06:30 GMT

பிப்ரவரி 2 இல் டெல்லி காவல்துறை மற்றும் உத்தரப் பிரதேச காவல்துறை சேர்ந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான சாவேட் ரஷீத் என்னும் நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குப் பதிவாகியுள்ளது. 
 

அறிக்கையின் படி, ரஷீத் இரவு 11 மணியளவில் மீரட் பகுதியில் காரில் செல்வதாக ரகசியத் தகவலின் படி டெல்லி காவல்துறை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. "ரஷீத் அந்த பகுதியைக் கடந்த போது, அவரை சரணடையக் கேட்டுக்கொண்டனர் ஆனால் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். காவல்துறை மற்றும் ரஷீதுக்கு இருவருக்கும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு காவல்துறை மீது குண்டு பாய்ந்தது ஆனால் பாதுகாப்பு ஜாக்கெட்டால் காப்பாற்றப்பட்டனர்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


"சாவத் நோக்கி காவல்துறை துப்பாக்கிச் சூடு மேற்கொண்டது. அதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் உயிரிழந்தார்," என்று துணை காவல் ஆணையர் பிரமோத் சிங் குஷ்வாஹ் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து காவல்துறை துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளது. மேலும் காரில் இருந்து தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 


 

ரஷீத் செப்டம்பர் 7 2020 இல் உத்தரப் பிரதேச காவல்துறையில் ஒரு கான்ஸ்டபிளை கொலை செய்துள்ளார். மேலும் 2019 இல் டெல்லியில் பலாத்கார வழக்கும் பதிவு செய்துள்ளது. இவர் மீது மொத்தம் 21 குற்ற வழக்குப் பதிவாகியுள்ளது. அதில் 13 வழக்கு டெல்லியிலும் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் எட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Similar News