தொடரும் அட்டகாசம்.! பா.ஜ.கவின் தலித் தொண்டர்கள் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய TMC குண்டர்கள்.!
தொடரும் அட்டகாசம்.! பா.ஜ.கவின் தலித் தொண்டர்கள் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய TMC குண்டர்கள்.!
தேர்தல் காலம் நெருங்கி வருவதைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவர்களுடன் நிற்கும் இந்து உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. பா.ஜ.க டிவிட்டரில் பகிர்ந்த ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக, TMC குண்டர்கள் இரண்டு பா.ஜ.க உறுப்பினர்கள் மீது சுடு தண்ணீர் ஊற்றியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் சாந்து டோம் மற்றும் மாகோன் டோம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. டோம் இந்து சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகமாகும். இந்த சமூகமானது மேற்கு வங்காளத்தில் பிர்பும் மற்றும் பங்குரா மாவட்டத்தில் அதிகமுள்ளனர். மேலும் அவர்கள் பீகார் மற்றும் ஜார்கண்டில் வசிக்கின்றனர்.
TMC goons pour boiling water over BJP karyakartas, Santu Dom & Makhon Dom!
— BJP Bengal (@BJP4Bengal) February 12, 2021
This inhuman act was carried out on them only because they were BJP workers! Is there any crime bigger than being a ‘BJP Karyakarta’ in Pishi’s Bengal?
Bengal will uproot TMC in the upcoming elections. pic.twitter.com/lDd9pfXrIz
இந்த சம்பவமானது பிர்பும் மாவட்டத்தில் நடந்துள்ளது. மேலும் TMC கும்பல் பா.ஜ.க உறுப்பினர்கள் மீது சுடு தண்ணீர் ஊற்றியதால் இவர்கள் இருவரைத் தவிர மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். மேலும் TMC உறுப்பினர் அவர்களது கொடியை பா.ஜ.க தொண்டர்கள் அகற்றியதால் கோபமடைந்து செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இருதரப்பினர்களுக்கும் இடையில் வன்முறை வெடித்து, பின்னர் காவல்துறை நிலைமையைச் சரி செய்தது.
தற்போது மேற்கு வங்காளத்தில் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. இவர்கள் கொடி அகற்றியதை ஒரு சாக்காகக் கூறி அவர்களின் அட்டகாசத்தை நியாயப்படுத்துகின்றனர். ஆனால் சுந்ததிர தினத்தன்று பா.ஜ.க உறுப்பினர் சுதர்ஷன் பிரமணிக் கொலை செய்யப்பட்டது மறைந்து விட்டது. மேலும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நேரடியாகத் தாக்கப்பட்ட போது அங்கு அவர்கள் வந்து காப்பாற்றவில்லை. மேலும் இவர்கள் தலித் மக்களை இந்து சமூகத்திலிருந்து அகற்றுவதே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளனர்.