சபரிமலைக்கு ரயில் சேவை.! நிறைவேறப்போகும் நெடுநாள் திட்டம்.!
சபரிமலைக்கு ரயில் சேவை.! நிறைவேறப்போகும் நெடுநாள் திட்டம்.!
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்காமலையை, கேட்டயம் மாவட்டத்திலுள்ள எரிமேலி உடன் இணைக்கும் சபரிமலை ரயில் திட்டம் 1997-98 பட்ஜெட்டில் 517 கோடி ரூபாய் செலவில் அறிவிக்கப்பட்டது.
இந்த எரிமேலி சபரிமலை அடித்தளமான பாம்பனில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அப்பொழுது இந்த 111 கிலோமீட்டர் ரயில்வே திட்டத்தில் ரயில்வே துறை அக்கறை காட்டவில்லை, கேரள அரசாங்கம் ஆர்வமுடன் இருந்ததால் 50 சதவிகித செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதித்தது.
இதற்கு பதிலாக கேரள அரசு அந்த வழியே பராமரிக்கும் பொறுப்பை வழங்க வேண்டும் என்று கேட்டு இருந்தது. அப்போதிலிருந்து இந்த திட்டத்தின் செலவு 517 கோடியிலிருந்து 2817 கோடி ஆக ஐந்து மடங்கு அதிகரித்துவிட்டது. சபரிமலை ஐயப்ப பக்தர்களின் பலன் அளிக்கும் இந்த திட்டம் 23 வருடங்களாக கிடப்பில் இருந்து, தற்பொழுது பாதி செலவை ஏற்றுக்கொள்ள கேரள அமைச்சரவை முன்வந்திருப்பதை அடுத்து முன்வந்திருக்கிறது.
27 ஜனவரி 2016யில் வணிகரீதியான சாத்தியமான திட்டங்களை அடையாளம் காணும் பொருட்டு ரயில்வே அமைச்சகமும் கேரள அரசும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அப்பொழுது இந்த திட்டத்திற்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்தது.
இந்த திட்டம் பின்னர் ஒரு சிறப்பு நோக்க வெஹிக்கிலிடம் ஒப்படைக்கப்பட்டு 51: 49 சதவிகித விகிதத்தில் பிரித்துக் கொள்ளப்படும். இதில் மாநிலமே அதிக பங்கை கொண்டிருக்கும். இதில் வரும் லாபம் சமமாக பிரித்துக் கொள்ளப்படும்.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த திட்டத்தை எரிமேலியிலிருந்து கொல்லத்தில் உள்ள புனலூர் வரை நீட்டிக்கவும், வழி வகுக்கும். அடுத்து இரண்டாவது கட்டத்தில் தமிழ்நாட்டை இணைக்கும். மூன்றாவது கட்டத்தில் புனலூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள நேமமில் இணைக்கப்படலாம்.