குடியரசு துணைத்தலைவரை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கம்.!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்கு என்பது அடையாளமாக ப்ளூ டிக் வழங்கப்படுகிறது. இன்று காலை இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டது.

Update: 2021-06-05 12:01 GMT

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்கு என்பது அடையாளமாக ப்ளூ டிக் வழங்கப்படுகிறது. இன்று காலை இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டது.




 


இதற்கு இந்தியாவில் உள்ள பலரும் கண்டனங்களை ட்விட்டரிலேயே பதிவிட்டனர். கண்டனங்களை தொடர்ந்து ப்ளூ டிக்கை மீண்டும் சேர்த்தது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக்கை நீக்கிய சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #BanTwitterInIndia என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News