பெண்ணை மதமாற்றம் செய்து திருமணம் செய்யத் துப்பாக்கி முனையில் மிரட்டிய இளைஞன்!
பெண்ணை மதமாற்றம் செய்து திருமணம் செய்யத் துப்பாக்கி முனையில் மிரட்டிய இளைஞன்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத் குற்றங்களுக்கு எதிராகவும் மற்றும் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராகவும் சட்டம் கொண்டுவரப் பட்டு அதன் கீழ் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், குற்றவாளிகள் தங்கள் குற்றங்களைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றனர். தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் பரேலியில் பாதிக்கப்பட்ட பெண் தன்னை முஸ்லீம் இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் வைத்து மதமாற்றச் செய்யக் கட்டாயப்படுத்துவதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் காவல்துறைக்கு அளித்த புகாரில், குற்றம் சாட்டப்பட்ட அப்ரான் கான் தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாறி திருமணம் செய்யத் துன்புறுத்துவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மறுத்தபோது துப்பாக்கி முனையில் வைத்து அவர் மற்றும் அவரது குடும்பத்தினரை நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டியுள்ளார். காவல்துறை இவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் லவ் ஜிகாத் குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் B.Sc நர்சிங் படித்து வருகிறார். அப்ரார் கான் வழியில் இவரை நிறுத்தித் துன்புறுத்தி வந்துள்ளான். மேலும் மதம் மாறவும் கட்டாயப்படுத்தியுள்ளான். இவர் மறுத்தபோது பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றும் அச்சுறுத்தியுள்ளான். இதனால் பாதிக்கப்பட்ட பெண் மனவுளைச்சலுக்கு ஆளானது மட்டுமல்லாமல் அவரது படிப்பையும் பாதித்தது என்றார்.