பரபரப்பில் உ.பி! நொய்டாவில் மருத்துவமனைக்கு வெளியே வெடிகுண்டு? போலீஸ் குவிப்பு!
பரபரப்பில் உ.பி! நொய்டாவில் மருத்துவமனைக்கு வெளியே வெடிகுண்டு? போலீஸ் குவிப்பு!
"நாங்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்தோம். நிபுணர் குழுக்கள் இங்கு வந்தன. முதலில், இது வெடிபொருள் போலத் தெரியவில்லை. ஆனால் பின்னர் வெடிகுண்டு நிபுணர் குழு வந்து இதை செயலிழக்கச் செய்தது" என்று கவுதம் புத்தா நகர் போலீஸ் கமிஷனர் அலோக் சிங் கூறினார். நொய்டா பிரிவு 27 இல் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பிரிவு 27 இல் உள்ள கைலாஷ் மருத்துவமனையின் லேண்ட்லைன் எண்ணை ஒருவர் அழைத்து, கட்டிடத்தின் அடித்தளத்தில் ஒரு குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாக, ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். "போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்துவிட்டன. மேலும் கட்டிடத்தில் உள்ள சந்தேகத்திற்கிடமான அனைத்து பொருள்களும் சோதனை செய்யப்பட்டது. பின்னர் இது ஒரு மோசடி அழைப்பு எனத் தெரிய வந்தது" என்று நேற்றைய சம்பவம் குறித்து நொய்டாவின் கூடுதல் போலீஸ் கமிஷனர், ரன்விஜய் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அழைப்பாளரைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.