ஆதார் அட்டை புதுப்பிப்பது கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் அட்டையை புதுப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-11-11 11:35 GMT

நாட்டு மக்களுக்கு ஆதார் அட்டை முக்கியமான அடையாள அட்டையாக திகழ்கிறது. மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பரவும் வங்கி தொடர்பான சேவைகள் மற்றும் பத்திரப்பதிவு செய்யவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. அனைவருக்கும் ஆதார் எண் வழங்குவதில் இதுவரை 134 கோடி பேருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆதார் முறைகளில் சில திருத்தங்கள் செய்திருக்கிறது.


முக்கியமான செய்த திருத்தங்களில் ஆதார் அட்டைதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதற்காக தங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணத்தையும், முகவரியுடன் கூடிய அடையாள ஆவணத்தையும் சமர்ப்பித்து அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் தரவுகளை சேமித்து வைக்கும் மத்திய அடையாளத் தரவுகள் சேமிப்பதில் ஆதார் தொடர்பான தகவல்கள் துல்லியமாக இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.


இந்த ஆதார் அடையாள அட்டைதாரர்கள் மை ஆதார் இணையதளத்திலும்,மை ஆதார் செயலிலும் அப்டேட் டாக்குமெண்ட் என்று பிரிவில் இந்திய தனித்துவம் அடையாள ஆணையம் சேர்த்துள்ளது. இது தவிர பக்கத்தில் உள்ள ஆதார் மையங்களுக்கு நேரில் சென்று ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். ஆதார் எண் வழங்கிய நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்த கோரிக்கையை விடுத்தது. இப்பொழுது மத்திய அரசு ஆதார் முறைகளில் திருத்தம் செய்து இந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Maalaimalar News

Tags:    

Similar News