சிங்கப்பூர் நாட்டின் தரத்துக்கு இணையாக திட்டம் வகுக்கும் உத்ரபிரதேச மாநிலம் - அமலுக்கு வரப்போகும் அசத்தல் சட்டம்!

சிங்கப்பூர் நாட்டின் தரத்துக்கு இணையாக திட்டம் வகுக்கும் உத்ரபிரதேச மாநிலம் - அமலுக்கு வரப்போகும் அசத்தல் சட்டம்!

Update: 2021-02-04 08:13 GMT

சிங்கப்பூரின் அடிப்படையில் உத்தரபிரதேசத்தை சுத்தமாக்கும் முயற்சியில், சுற்றுச்சூழலை அசுத்தமாக்கும் மக்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த நோக்கத்திற்காக, உத்தரப்பிரதேச திடக்கழிவுகள் (மேலாண்மை, செயல்பாடு மற்றும் சுத்தம்) வழிகாட்டுதல்களை கொண்டு வர மாநில அரசு முன்மொழிந்து அவற்றை அமைச்சரவையில் நிறைவேற்றியது.

இது தொடர்பாக அரசாங்கத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை ஆலோசனைகளை கோரியுள்ளதாக இந்தி நாளேடான இந்துஸ்தானில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட சட்டத்தின் கீழ், கார்களில் இருந்து சாலையில் எச்சில் துப்புவது அல்லது குப்பைகளை வீசி  பிடிபடுபவர்களுக்கு  ரூ .1,000 அபராதம் விதிக்கப்படும்.

உலர்ந்த மற்றும் ஈரமான கழிவுகளை கொட்டுவதற்கு குப்பைத் தொட்டிகளை வைத்திருப்பது போன்ற நகர்ப்புறங்களை சுத்தம் செய்வதற்கு பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேபோல், குப்பை சேகரிக்க வீடு வீடாகவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

100 க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட ஒரு கூட்டத்தின் அமைப்பாளர்கள் அந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், மீறினால் அபராதம் விதிக்கப்படு என்று அரசாங்கம் கூறியது. இடத்தின் அளவு, குப்பைகளின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் அபராதம் வசூலிக்கப்படும்.

குப்பைகளை வீசுவதற்காக விற்பனையாளர்களுக்கு அபராதம்

வாடிக்கையாளர்கள் சாலையில் குப்பைகளை கொட்டினால், அரசு விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் கழிவுகளை அகற்றுவதற்கான பெட்டிகளை வைத்து நகராட்சி கழிவு சேகரிப்பு வாகனத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் யோகி, மாநிலத்தில் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Similar News