துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

Update: 2022-01-23 12:56 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக துணை குடியரசுத் தலைவர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், "இன்று ஐதராபாத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டுத் தனிமையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது'' என்று பதிவிடப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது முறையாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Twiter

Image Courtesy: India Radio News

Tags:    

Similar News