டெல்லி குண்டுவெடிப்பை நாங்கள்தான் நிகழ்த்தினோம்.. ஒப்புக்கொண்ட ஜெய்ஷ்-உல்-ஹிந்த் தீவிரவாத அமைப்பு.!

டெல்லி குண்டுவெடிப்பை நாங்கள்தான் நிகழ்த்தினோம்.. ஒப்புக்கொண்ட ஜெய்ஷ்-உல்-ஹிந்த் தீவிரவாத அமைப்பு.!

Update: 2021-01-30 15:02 GMT

டெல்லி இஸ்ரேல் தூதரகம் முன்பாக நேற்று மாலை சிறிய அளவிளலான குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தூதரகம் முன்பாக எப்பபோதுமே பாதுகாப்பு படையினர் இருக்கும் இடத்தில் குண்டுவெடிப்பு நடந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த குண்டுவெடிப்பில் 4 கார்கள் சேதம் அடைந்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், டெல்லி காவல்துறை அதிகாரி அனில் மிட்டல் ஆரம்ப விசாரணையில், ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு குறும்பு முயற்சியாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

இதனிடையே டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இஸ்ரேலிய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்புக்கு நாங்கள்தான் பொறுப்பு என்று ஜெய்ஷ்உல் ஹிந்த் சமூக வலைதளங்களில் தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

Similar News