அதிக முறை மத்திய பட்ஜெட்டை வழங்கியது யார்? சுவாரஸ்யமான தகவல்கள்.!

அதிக முறை மத்திய பட்ஜெட்டை வழங்கியது யார்? சுவாரஸ்யமான தகவல்கள்.!

Update: 2021-01-28 19:00 GMT

மத்திய பட்ஜெட் 2021 ஐ மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ம் தேதி முன்வைக்க உள்ளார்.  நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் மூன்றாவது முறையாக சீதாராமன் முன் வைக்கும் பட்ஜெட் இது. கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட அனைத்து இழப்புகளிலிருந்தும் மிகவும் தேவையான எழுச்சியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த பட்ஜெட்டை அரசாங்கம் எவ்வாறு திட்டமிடுகிறது என்பதைப் பார்க்க மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

இதற்காக நிதி அமைச்சகத்தில் ‘ஹல்வா விழா’ ஏற்பாடு செய்யப்பட்டது, இது பட்ஜெட் ஆவணங்களின் தொகுப்பின் தொடக்கத்தைக் குறித்தது.

சனிக்கிழமைஎன்று  (ஜனவரி 24) நடைபெற்ற இந்த நிகழ்வில் நிதித்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் நிதி அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்வு அனுசரிக்கப்பட்டது என்றாலும், COVID-19 நிலைமை காரணமாக இந்த ஆண்டு பட்ஜெட் காகிதத்தில் அச்சிடவில்லை. தகவல்களின்படி, அதற்கு பதிலாக அது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்னணு முறையில் விநியோகிக்கப்படும்.

 பட்ஜெட் தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்கள்: 

இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மூன்றாவது பட்ஜெட்.  அதிகமுறை பட்ஜெட் சமர்ப்பிப்பதில் முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய் ரெகார்ட் வைத்திருக்கிறார், பி சிதம்பரம் தொடர்ந்து எட்டு முறை சமர்ப்பித்திருக்கிறார்.

 1970-71ல் பட்ஜெட்டை முன்வைத்த முதல் பெண் இந்திரா காந்தி ஆவார்.  அவர் பிரதமராக இருந்ததோடு நிதியமைச்சரின் கடமைகளையும் ஏற்றுக் கொண்டிருந்தார்.

1955 வரை, பட்ஜெட் ஒரு மொழியில் மட்டுமே வழங்கப்பட்டது - ஆங்கிலம்.  1955-56 அமர்வின் போது தான் பட்ஜெட் ஆவணங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அச்சிடப்படத் தொடங்கின.

1967-68 பட்ஜெட் மற்றொரு  துணை பிரதமரால் வழங்கப்பட்டது.  மொராஜி தேசாய் நிதியமைச்சராக இருந்ததோடு அந்தப் பதவியை வகித்தார்.

முதன் முதலில்  சமர்ப்பிக்கப்பட்ட இந்திய பட்ஜெட் உண்மையில் ஒரு ஸ்காட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜேம்ஸ் வில்சனால் செய்யப்பட்டது.

 இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் முதல் பட்ஜெட் 1947 நவம்பர் 26 அன்று வழங்கப்பட்டது. அதை அப்போதைய நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி வழங்கினார்.

 பிப்ரவரி 1 ம் தேதி பட்ஜெட்டை வழங்குவதற்கான விதிமுறை சமீபத்தில், 2017 இல், அருண் ஜெட்லியுடன் தொடங்கப்பட்டது.  அதற்கு முன்னர் இது பிப்ரவரி கடைசி நாளில் மக்களவையில் வழங்கப்பட்டது.

 2017 ஆம் ஆண்டில் தான் ரயில் பட்ஜெட் மத்திய பட்ஜெட்டில் இணைக்கப்பட்டது.

Similar News