நயாகரா நீர்வீழ்ச்சியில் இந்திய தேசிய மூவர்ணக் கொடியின் நிறங்கள் தனி அழகுதான்!

Update: 2021-05-03 12:02 GMT

இந்தியா தற்போது கொரோனா இரண்டாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு உதவியாக நாடுகள் தங்கள் தரப்பில் இருந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. தற்பொழுது இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகரா நீர் வீழ்ச்சியில், இந்திய தேசிய கொடியின் வண்ணத்தில் ஒளிரூட்டப்பட்டு ஜொலித்தது. இந்தியா கொரோனாவை வெற்றிகொள்ள இந்திய தேசிய கொடியின் வண்ணத்தில் நயாகரா ஃபால்ஸ் தன்னுடைய ஆதரவை தெரிவித்தது.


இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிகவும் பயங்கரமாக உள்ளது. தினமும் பாதிப்புகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் தான் உள்ளன. ஆக்ஸிஜன் சிலிண்டர், தடுப்பூசிகள் பிறகு மருந்து பொருட்கள் ஆகியவற்றை அனுப்பி உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவிக் கரம் நீட்டி வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபா, இந்திய மூவர்ண கொடி நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது. இந்தியாவுக்கு இவ்வாறாக UAE ஆதரவு தெரிவித்தது. 


இந்நிலையில், உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகராவில், இந்திய மூவர்ண கொடியின் நிறத்தில் ஒளிரூட்டி, கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவுக்கு, கனடா ஆதரவு அளித்திருக்கிறது என்பதை தெரிவித்தது. அமெரிக்க கனடா எல்லையில் அமைந்திருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி, உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி ஆகும். இதன் புகைப்படத்தினை நயாகரா நீர்வீழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் அதிக உயிரிழப்பு, பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த சோதனை காலத்தில், இந்தியாவுடனான ஒற்றுமையை பிரதிபலிக்கும் வண்ணம், நயாகரா நீர்வீழ்ச்சி இந்திய கொடியின் வண்ணத்தில் ஒளிர்ந்தது. 


Similar News