முகக்கவசம் போடமாட்டீங்களா ? - பொதுமக்களிடம் டென்ஷன் ஆன முதலமைச்சர் நாராயணசாமி.!

முகக்கவசம் போடமாட்டீங்களா ? - பொதுமக்களிடம் டென்ஷன் ஆன முதலமைச்சர் நாராயணசாமி.!

Update: 2020-04-20 02:55 GMT

நாடு ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது, இதனிடையே புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் காலை 6 மணி முதல் பகல் 1 வரை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லித்தோப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையை முதலமைச்சர் நாராயணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார், அப்போது மக்கள் சமுக இடைவெளியை கடைபடிக்கிறார்களா, முக கவசம் அணிந்து வருகிறார்களா உள்ளிட்ட விஷயங்களை ஆய்வு செய்தார்.

மேலும் முக கவசம் இல்லாதவர்களுக்கு முக கவசம் வழங்கி அறிவுரை வழங்கிய அவர் வியாபாரிகள் தங்களது பொருட்களை சரியான விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் என்றும் உயர்த்தி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Similar News