சாத்தான்குளம் பிரச்சனை: சத்தியமா விடக்கூடாது - ரஜினி கோபத்தில் ட்விட்.!

சாத்தான்குளம் பிரச்சனை: சத்தியமா விடக்கூடாது - ரஜினி கோபத்தில் ட்விட்.!

Update: 2020-07-01 07:35 GMT

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி அதிக நேரம் கடையை திறந்து வைத்ததாக ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால் தான் இதற்கு காரணம் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த பிரச்சினை தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளது. தற்போது மதுரை உயர்நீதிமன்றக் கிளை தாமாக வந்து இந்த வழக்கை பற்றி விசாரித்து வருகின்றது.



இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இதனை பற்றி ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டார்: அதில் தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது.

சத்தியமா விடவே கூடாது.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார். 

Similar News