விஜயவாடாவில் 20 ஏக்கர் பூங்காவில் அம்பேத்கருக்கு 125 அடி உயர சிலை - ஆந்திர மாநில அரசு அமைக்கிறது.!

விஜயவாடாவில் 20 ஏக்கர் பூங்காவில் அம்பேத்கருக்கு 125 அடி உயர சிலை - ஆந்திர மாநில அரசு அமைக்கிறது.!

Update: 2020-07-10 03:19 GMT

ஆந்திராவின் விஜயவாடா நகரின் மையத்தில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைத்து அம்பேத்கரின் 125 அடி சிலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லை முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி நேற்று நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் பேசிய முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி, அம்பேத்கரின் சேவைகளை அனைவரும் நினைவில் கொள்ளும் வகையில் 20 ஏக்கர் பூங்காவில் சிலை கட்டப்படும் என்று கூறினார். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் ஒரு சிறந்த சக்தி என்று அவர் கூறினார்.

பூங்காவை அதன் அழகிய சூழலுடன் ஈர்க்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்படும் என்றார். பல்வேறு மொழிகளில் தேர்ச்சி பெற்ற அம்பேத்கர் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தையும் நன்றாக நிரூபித்துள்ளார் என்றார்.

 விஜயவாடாவில் அமைய உள்ள இந்த சிலையைப் போல இப்போது ஹைதராபாத்தில் தெலுங்கானா மாநில அரசு அமைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

Similar News