டி20 உலகக் கோப்பையை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி - ஆஸ்திரேலியா உறுதி!

டி20 உலகக் கோப்பையை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி - ஆஸ்திரேலியா உறுதி!

Update: 2020-06-21 11:19 GMT

டி20 உலகக் கோப்பை போட்டியை ரசிகர்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியை நடத்த உள்ளது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 16 அணிகள் கலந்து கொள்கிறது.

தற்போது இந்த கொரோனா வைரஸின் அச்சம் காரணத்தினால் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகத்தில் உள்ளது. ஆனால், பாதுகாப்பிற்காக ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டிகளில் நடத்தலாமா எனவும் கூறப்படுகிறது.

இதனைப்பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி கூறியது: "டி20 உலகக்கோப்பை போட்டி எப்போது நடைபெற்றாலும் போட்டியை ரசிகர்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படும். ரசிகர்களை அனுமதிப்பதால் எந்த ஒரு சிக்கலும் இருக்கப் போவதில்லை. ஆனால், 15 கிரிக்கெட் அணியினரை அழைத்து வந்து தொடரை நடத்துவது தான் பெரும் சவாலாக இருக்கப் போகிறது" என தெரிவித்துள்ளார்.

  

Similar News