நான்கு மாநிலங்களுக்கு 204 தனிமைப்படுத்தும் ரயில் பெட்டிகளை அனுப்பி வைத்த மத்திய அரசு - தகுந்த நேரத்தில் கை கொடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
நான்கு மாநிலங்களுக்கு 204 தனிமைப்படுத்தும் ரயில் பெட்டிகளை அனுப்பி வைத்த மத்திய அரசு - தகுந்த நேரத்தில் கை கொடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
இந்திய ரயில்வே நான்கு மாநிலங்களில் 204 பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றி உபயோகத்துக்கு அளித்துள்ளது. டெல்லியில் இருக்கும் ஷகுர்பஸ்தி பணிமனையில் மட்டும் 54 பெட்டிகள் தயாராக உள்ளன. இது மேலும் அதிகரிக்கப்பட்டு 500 பெட்டிகள் வரை தயார் நிலையில் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள் பற்றாக்குறையாக இருப்பதால் நிலையை சமாளிக்க 500 ரயில் பெட்டிகள் தரப்படும் என்று அறிவித்தார்.
முன்னதாகவே தனிமைப்படுத்துதலுக்காக ரயில்வே குளிர்சாதன வசதி இல்லாத 5,000 பெட்டிகளை தயார் செய்து வைத்திருந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போது உத்திரப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் அவற்றை அனுப்பி வைத்து உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
பண்டிட் வாரணாசி, படோஹி, ஃபைசாபாத், சஹாரன்பூர், மிர்சாபூர், ஜான்சி மற்றும் தீனதயாள் உபாத்யாயா சந்திப்புகளில் 10 பெட்டிகள் வீதம் 70 பெட்டிகள் உத்திரப் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. டெல்லி ஷகுர்பஸ்தி பணிமனையில் 54 பெட்டிகள் தயாராக உள்ளன.
தெலங்கானாவில் செகந்திராபாத், கச்சேகுடா மற்றும் அடில்லாபாத் ரயில் நிலையங்களில் 20 பெட்டிகள் வீதம் 60 ரயில் பெட்டிகளும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 20 பெட்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துவிட்ட நிலையில் உபி 24 இடங்களுக்கு 240 ரயில் பெட்டிகளும், தெலங்கானா 3 இடங்களுக்கு 60 பெட்டிகளும், டெல்லி 10 பெட்டிகளும் கோரி வேண்டுகோள் விடுத்திருந்தன.