கொரோனாவால் 22,000 மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பாதிப்பு, மனித இனத்தை காக்கும் தெய்வங்கள்.!
கொரோனாவால் 22,000 மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பாதிப்பு, மனித இனத்தை காக்கும் தெய்வங்கள்.!
உலகில் 52 நாடுகள் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 22,000 மருத்துவகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 17லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தொற்றறை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்புக்குக் சென்ற புதன்கிழமை வரை கிடைத்த தகவல்களின்படி, கொரோனா வைரஸ் தொற்றால் 22,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை உண்மையானதை விட குறைவாக தான் இருக்கும். ஏனெனில், சரியான தகவல்கள் கிடைப்பதில்லை.
மருத்துவகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக முன் எச்சரிக்கை மற்றும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அடிக்கடி அறிவுறுத்தி வருகிறது.