அயோத்தி ராமர் கோவில்காக 24 கிலோ வெள்ளி செங்கல்களை நன்கொடையாக வழங்கிய ஜெயின் சமூகத்தினர்.!

அயோத்தி ராமர் கோவில்காக 24 கிலோ வெள்ளி செங்கல்களை நன்கொடையாக வழங்கிய ஜெயின் சமூகத்தினர்.!

Update: 2020-08-04 07:32 GMT

அயோத்தியில், வரலாற்றுச் சிறப்பு மிக்க ராமர் கோவிலின் பூமி பூஜை அடிக்கல் நாட்டும் விழா நாளை நடைபெற உள்ளது. இந்த பூஜை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது . இந்த அடிக்கல் நாட்டும் விழாவில் மக்கள் கூட்டம் சேர வேண்டாம் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இந்த ராமர் கோவிலின் பூமி பூஜைக்காக பல அமைப்புகள், பொதுமக்கள், பிரபலங்கள் போன்றோர் நன்கொடைகள் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஜெயின் சமூகத்தினர் ராமர் கோவில்காக 24 கிலோ வெள்ளி செங்கல்களை கொடுத்துள்ளனர். இதை அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்து அமைப்பிடம் வெள்ளி செங்கல்களை ஒப்படைத்தனர்.  

மேலும், நாளை ஆயிரக்கணக்கான மந்திரங்கள் ஓதிக்கப்படும் என்றும் ராமர் கோவில் கட்டும் வேலைகள் நல்ல முறையில் முடிவதற்கு பிரார்த்தனைகள் செய்யப்படும் என்றும் ஜெயின் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.   

Similar News