கன்னியாகுமரி : சோதனை சாவடி பிரச்சினையால் அல்லலுறும் 3000 மேற்பட்ட பொதுமக்கள் - கண்திறக்குமா மாவட்ட நிர்வாகம்.?
கன்னியாகுமரி : சோதனை சாவடி பிரச்சினையால் அல்லலுறும் 3000 மேற்பட்ட பொதுமக்கள் - கண்திறக்குமா மாவட்ட நிர்வாகம்.?
தமிழக கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பேரூராட்சி, காக்கவிளையில் அமைய வேண்டிய சோதனை சாவடியானது ஏழு வருடங்கள் முன்பாக காக்கவிளையிலிருந்து 2 கிமீ உள்ளே பழைய முடிபுரை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் ஆலயம் பகுதியில் அமைக்கபட்டது.
அந்த பகுதியில் சுமார் 850 மேற்பட்ட வீடுகளுகளும் 3000 மேற்பட்டோர் வசிக்கின்றனர் இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் கட்டிட பணிகளுக்கும். பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் படி வீடுகள் கட்ட 2லட்சம் பத்தாயிரம் ரூபாய் வரை பயனாளிகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் கொல்லங்கோடு பேரூராட்சி மற்ற பகுதிகளில் செலவாகும் தொகையை விட அதிகமாக கட்டுமானப்பொருட்களை சோதனை சாவடியை கடந்து கொண்டு வர செலவாகிறது.
இதனால் அப்பகுதி வாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த சோதனை சாவடி எல்லை பகுதியில் அமைந்து இருந்தால் அவர்களுக்கு கூடுதல் தொகை செலவாகாது.
நாட்டை உலுக்கி கொண்டிருக்கும் இந்த கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பழைய முடிபுரை சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பாக சோதனை நடத்தபட்டு வருகிறது.
இது தமிழக கேரளா எல்லை காக்கவிளையிலிருந்து 2கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நபர்கள் எளிதாக கொல்லங்கோடு பகுதி வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறார்கள்
இது ஒரு நோய் தொற்று பரவும் அச்சத்தையும் அந்த பகுதி சார்ந்த மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது மேலும் சில தினங்களுக்கு முன்பாக திருமண்னம் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைக்கு பணி செய்ய ஆசாம் பகுதியை சேர்ந்த ஏழு நபர்கள் வந்து சேர்ந்தனர் பின்னர் பொதுமக்கள் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களை களியக்காவிளை சோதனை சாவடிக்கு அழைத்துச் சென்றனர்
தமிழக கேரளா பகுதியில் சோதனை சாவடி அமைந்திருந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வருவதை தவிர்த்திருக்கலாம் மேலும் இந்த சோதனை சாவடி மாற்றியமைப்பதற்கு கோரிக்கை விடுக்கும் நபர்களை மக்கள் விரோதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள் இது சிலரின் சுய லாபத்திற்காக இந்த சோதனை சாவடி இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் பழையமுடிப்புரை காக்காவிளை பகுதிக்கு இடைப்பட்ட உள்ள பொதுமக்கள் ஏதேனும் அத்தியாவசிய தேவைக்காக கூட கொல்லங்கோடு பகுதிக்கு வரும் வேளையில் பல்வேறு கட்ட சோதனைக்கு உட்படுத்தப் படுகிறார்கள் மேலும்