“இங்குள்ள 37 எம்பிக்களும் பெங்களூரு சென்று காவிரி நீரைக் கொண்டுவர வேண்டும்” - பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!!

“இங்குள்ள 37 எம்பிக்களும் பெங்களூரு சென்று காவிரி நீரைக் கொண்டுவர வேண்டும்” - பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!!

Update: 2019-06-13 13:16 GMT


இங்குள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணியின் 37 எம்பிக்களும் பெங்களூரு சென்று பேசி, காவிரி நீரைக் கொண்டுவர வேண்டும் என்று  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து திருச்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: -


காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி, கர்நாடக அரசு வழங்கும் தண்ணீரைப் பெற்றுத் தரும் பொறுப்பு மத்திய அரசுக்கும் உள்ளது. அரசு என்ன செய்யவேண்டுமோ அதைக் கட்டாயமாகச் செய்யும். 


காவிரி நீரை கர்நாடகா தரவேண்டும். அப்படிக் கொடுக்கவில்லையெனில், இங்குள்ள 37 எம்பிக்களும் புறப்பட்டு பெங்களூருக்குச் செல்லவேண்டும். கர்நாடகாவில் அவர்களுடைய கூட்டணிக் கட்சியின் அரசுதான் நடக்கிறது. அவர்களிடம் பேசி, அணையைத் திறந்து தண்ணீர் கொண்டு வந்தாக வேண்டும்.


இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



Similar News