இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய ஹை கமிஷனிலிருந்து 55 ஊழியர்களை அடுத்த ஏழு நாட்களில் இந்தியா திரும்ப பெறுகிறது.!
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய ஹை கமிஷனிலிருந்து 55 ஊழியர்களை அடுத்த ஏழு நாட்களில் இந்தியா திரும்ப பெறுகிறது.!
இந்திய அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய ஹை கமிஷனில் பணிபுரியும் 55 அதிகாரிகளை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் முடிவு செய்து ஊழியர்களின் எண்ணிக்கையை 50% குறைப்பது என்று ஒப்புக்கொண்டுள்ளன. பாகிஸ்தானும் புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் ஹை கமிஷனிலிருந்து 50% ஊழியர்களை திரும்ப பெறும்.
இந்தியா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, புதுடில்லியிலுள்ள பாகிஸ்தான் ஹை கமிஷன் ஊழியர்களும் பாதியாக குறைக்க படுவார்கள் என்று அறிவித்தது. இஸ்லாமாபாத்தில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்களால் பாகிஸ்தானுடனான உறவை இந்தியா குறைத்துக்கொள்ள எண்ணுகிறது.
பாகிஸ்தானில் உள்ள இந்திய அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டார்கள் என்னும் அதிர்ச்சிகரமான செய்தி ஜூன் 16-ஆம் தேதி வெளிச்சத்திற்கு வந்ததே இந்திய ஹை கமிஷனில் இருந்து ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முடிவானது எடுக்கப்பட காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த முடிவானது, பாகிஸ்தானில் உள்ள இந்திய அதிகாரிகள் மோசமாக நடத்தப்பட்டதால் எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பு இந்திய அதிகாரிகளை கடத்தி, அவர்களை சித்திரவதை செய்துள்ளது. மேலும் சாலை விபத்து ஏற்படுத்தியதாகவும், கள்ள நோட்டு வைத்திருந்ததாகவும் அவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவத்தில்,புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் ஹை கமிஷனில் வேலை பார்க்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இந்தியாவை உளவு பார்த்ததாக இந்தியாவிற்கு தெரியவந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, இந்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம் இந்தியாவின் பாகிஸ்தான் தூதரக பொறுப்பாளர் சையத் ஹைதர் சாவை அழைத்து அவர்களின் தூதரக அதிகாரிகள் உளவு பார்த்த செயல் மற்றும் தீவிரவாத அமைப்புகள் உடனான தொடர்பை கூறி அவரை எச்சரித்தது.