ABVP மாணவிக்கு வாட்ஸ் ஆப் மூலம் கொடுக்கப்படும் ஆபாசத் தொந்தரவு - டெல்லி போலீசில் புகார்.! #SonakshiDogra #ABVP

ABVP மாணவிக்கு வாட்ஸ் ஆப் மூலம் கொடுக்கப்படும் ஆபாசத் தொந்தரவு - டெல்லி போலீசில் புகார்.! #SonakshiDogra #ABVP

Update: 2020-06-09 05:13 GMT

பாஜக ஆதரவாளராக சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளைக் கூறும் சாதாரண குடும்பத்து பெண்களுக்கு, அவர்கள் கருத்துரிமையை ஒடுக்கவும், பயமுறுத்தவும் அவர்களது மொபைல் எண்களை வெளியிடுவதன் மூலமும் இன்ன பிற வழிகள் மூலமும் தொந்தரவுகள் சமீபத்தில் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. 



நேற்று, அகில் பாரதி வித்யார்த்தி பரிஷத் (ABVP)மாணவ இயக்கத்தைச் சேர்ந்த டெல்லி பல்கலைக் கழக மாணவி சோனாக்க்ஷி டோக்ரா என்பவர், கடந்த மூன்று மாதங்களாக தான் வாட்ஸ் ஆப் மூலம் மனரீதியாக தொடர்ந்து தொந்தரவுக்கு ஆளாவதாகவும், வலது சாரி சிந்தனையுடையவர் என்பதால், தன் மொபைல் எண்ணை யாரோ பொதுத் தளத்தில் வெளியிட்டு பல விதமான பாலியல் மெசேஜ்களும், புகைப்படங்களும் வந்த வண்ணம் இருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அதற்கான ஆதாரங்களாக ஸ்க்ரீன் ஷாட்களையும் வெளியிட்டுள்ளார். டெல்லி சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


பலரும் அவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். டெல்லி போலீசை உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வருகின்றனர். 



Similar News