அன்புமணி கேட்ட 6 கேள்வி.. நேரலையில் அவமான பட்ட எதிர் கட்சி செய்தியாளர்.. தரமான சம்பவம்.!
அன்புமணி கேட்ட 6 கேள்வி.. நேரலையில் அவமான பட்ட எதிர் கட்சி செய்தியாளர்.. தரமான சம்பவம்.!
பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., இன்று செய்தியாளர்களை சந்தித்து தாங்கள் எதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று விளக்கம் அளித்தார்.
தமிழக மக்களின் நலன் குறித்தே கூட்டணி அமைத்ததாவும் எங்கள் கொள்கைகளில் எள்ளளவும் மாற்றம் இல்லை என்று விளக்கி விட்டு செய்தியாளர்களை கேள்விகள் கேட்க அறிவுறுத்தினார்.
அப்போது செய்தியாளர்களில் ஒருவர் நான் உங்கள் போட்டி ஊடகம் சன் நியூஸ் என்றும் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்று மிகவும் வீம்பாக பேசினார்.
கூட்டணி வைக்கவில்லை என்று சொன்ன நீங்கள் கூட்டணி வைக்கிறீர்களே இது உங்கள் கொள்கைக்கு ஏற்புடையதா என்றும் நீங்கள் கூட்டணி வைத்தது தமிழர் நலனுக்கா இல்லை உங்கள் நலனுக்காக என்பதுபோல் கேட்டார்.
இதற்கு சற்று கோபம் அடைந்த அன்புமணி நிதானமாக தனது பதிலை தெரிவித்தார்.
1) திமுக என்ற கட்சியே முதலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஆரம்பித்ததுதான் தற்போது இவர்கள் எந்த அடிப்படையில் கூட்டு சேருகிறார்கள்?
2) கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ் கட்சியும் எதிர் எதிராக அடித்துக்கொண்டு நிற்கிறார்கள் இவர்கள் திமுக கூட்டணியில் ஒன்றாக இருப்பது எப்படி சாத்தியம் என்று கேட்டார்
3) கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருமாவளவன் திமுக குறித்து ஊழல் கட்சியென்றும் இனி திமுக அதிமுக இரண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொன்னார் இப்போது என்ன ஆனது
4) எல்லாவற்றிற்கும் மேலாக திமுகவின் தற்போதைய தலைவர் ஸ்டாலின் இலங்கை தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியினர் உடன் இனி கூட்டணி இல்லை என்று 2013 இல் சொன்னார் இப்போது எந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சியிடம் துண்டை போட்டு காத்திருக்கிறார்.