"தமிழ் துரோக, தமிழர் துரோகக் கூட்டமே - இன்னுமா உன் அரக்கப் பசி அடங்கவில்லை" - சோனியா வருகையை எதிர்த்து கொந்தளிக்கும் தமிழர்கள்! #GoBackSonia

"தமிழ் துரோக, தமிழர் துரோகக் கூட்டமே - இன்னுமா உன் அரக்கப் பசி அடங்கவில்லை" - சோனியா வருகையை எதிர்த்து கொந்தளிக்கும் தமிழர்கள்! #GoBackSonia

Update: 2018-12-16 04:38 GMT
2004 - 2014 காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி அரசாங்கத்தில் கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இலங்கை தமிழர் இன படுகொலைக்கு காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், ஒவ்வொரு இலங்கை அரசு நகர்வும் அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே தெரிவித்திருந்தார்.
இது போக, காவிரி டிரிபியூனல் தீர்ப்பை 6 ஆண்டுகள் கெஜட்டில் வெளியிடாமல் தமிழகத்திற்கு காங்கிரஸ் அரசாங்கம் துரோகம் இழைத்தது.
இந்நிலையில் தமிழ் நாடு மற்றும் தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்த காங்கிரஸ் தலைவி சோனியா திறக்க வருகிறார் என்றும் "தமிழ் துரோக, தமிழர் துரோகக் கூட்டமே! இன்னுமா உன் அரக்கப் பசி அடங்கவில்லை?? தமிழையும், தமிழர்களையும் வாழ விடு!" என்றும் இணையவாசிகள் காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சிகளை பிரித்து மேய்ந்து வருகின்றனர்.

Similar News