2049 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 30 வருடங்கள் இந்தியாவை ஆளவிற்கும் பா.ஜ.க !
2049 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 30 வருடங்கள் இந்தியாவை ஆளவிற்கும் பா.ஜ.க !
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றியை பெற்றது. 35 வருடங்களுக்கு பிறகு, பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது பா.ஜ.க. 2014 தேர்தலில் வென்ற இடங்களை விட சற்று அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. ஒடிசா, வங்காளம், திரிபுரா போன்ற மாநிலங்களில் இருந்த இடமே தெரியாமல் இருந்த பா.ஜ.க, குறிகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் பல மாநிலங்களில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்டது.
2014 ஆம் ஆண்டு 44 இடங்களை வென்ற காங்கிரஸ், இந்த தேர்தலில் 100 இடங்களையாவது கைப்பற்றும் என்று அரசியல் ஆலோசகர்கள் தெரிவித்தனர். ஆனால், அதே இடத்திலேயே இருக்கிறது காங்கிரஸ். 2014 ஆம் ஆண்டு 19.3% மாக இருந்த வாக்கு சதவீதம் 19.5% மாக மாறியுள்ளது. தற்போது வென்ற இடங்களில் பாதி இடங்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் வென்றது. ஒட்டுமொத்த இந்தியாவும் ராகுல் காந்தியை புறக்கணித்துள்ளது. கடந்த ஆட்சியில் சில குறைகள் இருந்தாலும், மக்கள் மோடியை ஒரு மனதாக தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு காரணம் வலுவான எதிர்க்கட்சி இல்லாதது தான்.
மோடி அரசிற்கு பங்கம் விளைவிக்கிறேன் என்ற பெயரில், ரபேல் விவகாரத்தில் சொதப்பி மக்களின் நம்பிக்கையை இழந்தது காங்கிரஸ். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கபட்ட ஒரு பிரதமரை திருடன் என்று அழைத்தது மக்களை முகம் சுளிக்க வைத்து. ராகுலின் NYAY திட்டத்தின் தாக்கம் எங்கும் தென்படவில்லை. பொது கூட்டங்களில் உளறுவது, பேட்டிகளில் சம்பந்தமில்லாது உளறுவது, இந்தியாவின் வளர்ச்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லாதது, மோடி எதிர்ப்பு அரசியலை மட்டுமே கையில் எடுத்தது, போன்றவற்றால் சொந்த தொகுதியிலேயே தோற்றார் ராகுல்.