நம்மையே அறியாமல் நம்மை பாதுகாக்கும் உடலின் 9 விசித்திர செயல்கள்..!
நம்மையே அறியாமல் நம்மை பாதுகாக்கும் உடலின் 9 விசித்திர செயல்கள்..!
நம் உடலின் கட்டமைப்பு, உயிரியில் ரீதியாக நிகழும் மாற்றங்கள், முறைகள் எதையும் முழுமையாக புரிந்து கொள்வது
அத்துனை எளிதல்ல. உடலின் பாதுகாப்பு அமைப்பு முறை அதுப்போலத்தான். அது நம்மை எந்த தோய்வுமின்றி 24 மணிநேரம், அனைத்து வார
நாட்கள், நம்மை
தாக்கக்கூடியாதாக இருக்கும் எதிலிருந்தும் நம்மை அயராது காக்கிற அரண்.
இச்செயல்களை செய்யும் பொழுதெல்லாம் என்றாவது நினைத்திருக்கிறீர்களா நாம்
எப்படியெல்லாம் பாதுகாக்க படுகிறோம் என்று... இனி ஒவ்வொறு முறையும் நினைத்து
கொள்ளுங்கள்...
கொட்டாவி விடுதல்
எப்போதெல்லாம் மூளை சூடேற்ற படுகிறதோ அல்லது அதீத வேலைப்பளு கொள்கிறதோ
அப்போதெல்லாம் அதை தளர்வுப்படுத்தி மிதப்படுத்துவதே இச்செயலின் நோக்கம்.
(என்னப்படிக்கும்
போதே கொட்டாவி வருதா...?????)
தும்மல்
நம்முடைய சுவாசப்பாதையில் எப்போதெல்லாம் ஒவ்வாமை ஊக்கிகள், நுண்ணுயிர்கள் தூசு
மற்றும் இதர உறுத்தல்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நாம் தும்முகிறோம். இந்த
குப்பைகளைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் ஆயுதமே இச்செயல்.
(இனிமேல் அனுபவிச்சு
தும்முங்க......)
நீட்டுதல்
அன்றைய நாளின் உடல்ரீதியான வேலைகளுக்கு நம் உடலை தயார்படுத்த அயத்தமாக
நாம் உடலை நீட்டி விரிக்கிறோம். ஆனால் நாம் இப்படி செய்யும் பொழுதெல்லாம் நம்
தசைகள் இயங்குகின்றன, இரத்தவோட்டம்
புத்துயிர் கொள்கிறது, மேலும் நம்முடைய
மனநிலையை மேம்படுத்துகிறது.
(அடடா.......!!!)
விக்கல்
எப்போதெல்லாம் நாம் அவசரகதியில் உணவு உட்கொள்கிறோமோ, பெரிய பெரிய
கவளைகளைகளை விழுங்குகிறோமோ அல்லது அதீதமாக உண்கிறோமோ நுரையீரலையும் இரைப்பையையும்
சார்ந்த நரம்பு எரிச்சல் அடைகிறது. அதன் விளைவே விக்கல்...