பெற்றோர்களின் மருத்துவ செலவிற்கு சேர்த்து வைத்திருந்த பணத்தை கட்அவுட்டிற்காக செலவு செய்த விஜய் ரசிகர் : தொடர்ந்து மூளைச் சலவை செய்யப்படும் தமிழக இளைஞர்கள்
பெற்றோர்களின் மருத்துவ செலவிற்கு சேர்த்து வைத்திருந்த பணத்தை கட்அவுட்டிற்காக செலவு செய்த விஜய் ரசிகர் : தொடர்ந்து மூளைச் சலவை செய்யப்படும் தமிழக இளைஞர்கள்
திரைப்படங்களாலும் திரைப்பட நடிகர்களாலும் தமிழக இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவது சில தசாப்தங்களாக நடந்து வருகிறது. தங்களின் திரைப்படங்கள் வெளிவரும் போது மட்டும், அரசியல் மட்டும் சமூக கருத்துக்களை கூறி இளைஞர்களை உணர்ச்சி ரீதியாக வசியம் செய்து, தங்களின் திரைப்படங்களுக்கு லாபம் ஈட்டுவது என்பது இன்றைக்கு சில நடிகர்களால் கடைபிடிக்கப்படும் யுக்தியாக இருக்கிறது. அடிப்படை ஆதாரமும் அறிவும் இல்லாமல் சில நடிகர்கள் பேசும் அரசியல் கருத்துக்களை பிரபலம் அடைய செய்ய இங்குள்ள பிரதான ஊடகங்களும் துணை போகின்றன. உணர்ச்சி பூர்வமாக நடிகர்கள் பேசுவதால் நாம் மூளைச்சலவை செய்யப்படுகிறோம் என்ற எண்ணம் தமிழக இளைஞர்கள் இடையே எழுவதில்லை. இதனை உணரச் செய்ய அறிஞர்களோ பேச்சாளர்களோ கூட முன் வருவதில்லை.
அந்த வகையில் அதிகமாக மூளைச் சலவை செய்யப்படும் இளைஞர்களில் விஜய் ரசிகர்கள் தான் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. சென்ற ஆண்டு வெளிவந்த சர்க்கார் திரைப்படத்தின் போது, விஜய் ரசிகர்கள் தங்கள் இல்லங்களில் உள்ள அரசாங்கம் அளித்த வீட்டு உபயோக பொருட்களை உடைத்து தள்ளிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானாது. இதில் மிகவும் பித்து பிடித்த ஒரு ரசிகர், கல்வி வளர வேண்டும் என்று அரசாங்கம் அளித்த மடிக்கணினியை போட்டு உடைத்த காணொளி பலரின் விமர்சனங்களை வரவேற்றது.
இவர்களுக்கு வேண்டுமானால் தமிழக அரசு இந்த பொருட்களை இலவசமாக வழங்கி இருக்கலாம். ஆனால் தங்கள் ரத்தத்தையும், வியர்வையும் சிந்தி உழைத்து வாழும் தமிழர்களின் வரிப்பணத்தால் தான் இந்த பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத முட்டாள்களாக தான் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது. இந்த மூளைச்சலவையை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டி சொகுசு வாழ்க்கையை வாழ்வது என்னவோ திரைப்பட கலைஞர்கள் தான்.